இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஐரிஸ் தேனா கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இன்று (13) ஈரானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரானுக்குச் செல்லும் வகையில் இன்று (13) உடல்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் புறப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணி இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் பங்கெடுத்ததன் பின்னர் குறித்த கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் எச்சரிக்கை இல்லாமல் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னர் மூழ்கத் தொடங்கிய ஈரானியக் கப்பலில் இருந்து இரண்டு அவசர அழைப்புகளுக்கு இலங்கை கடற்படை பதிலளித்து, உயிர் பிழைத்த 32 பேரை மீட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் கடற்படையினர் மூழ்கிய கப்பலில் இருந்து பல மாலுமிகளின் உடல்களை மீட்டனர்.
மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தப் படுகொலை, ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும்.


