தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (08) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
எனினும், நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று:
காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானதாக இருக்கும்.


