Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஏவுகணை அச்சுறுத்தலால் Air France மீட்பு விமானம் திரும்பியது!

ஏவுகணை அச்சுறுத்தலால் Air France மீட்பு விமானம் திரும்பியது!

துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு குடிமக்களை பரிஸுக்கு மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்ட Air France AF4190 விமானம், அந்த பகுதியில் ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக நேற்று திரும்பிச் செல்ல வேண்டியதாகியது. பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot இதை அறிவித்தார். பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்ததால் இந்த மீட்பு விமானப் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக Air France தெரிவித்தது.

இந்த விமானம் கெய்ரோ (Le Caire) வழியாக துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு மக்களை மீட்க திட்டமிடப்பட்டது. ஆனால் விமானம் திருப்பி அனுப்பப்பட்ட நேரத்தில் அதில் பயணிகள் யாரும் இல்லை. Flightradar24 தகவலின்படி, விமானம் கெய்ரோவில் இருந்து பிற்பகல் 3:21 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:30 மணியளவில் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு இரவு 8:50 மணிக்கு கெய்ரோவில் தரையிறங்கியது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னர் அதிகரித்துள்ளது. இந்த மோதலால் பாதிக்கப்பட்ட சுமார் 15 நாடுகளில் சுமார் 4 லட்சம் பிரெஞ்சு குடிமக்கள் இருப்பதாக பிரான்ஸ் வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது; இதில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமையாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments