Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

1989 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கம் 40 நாள் தேசிய துக்கக் காலத்தையும் ஏழு பொது விடுமுறை நாட்களையும் அறிவித்தது.

ஈரானிய அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (01)  அதிகாலை கமேனியின் மரணத்தை அறிவித்தது.

ஈரானிய தலைவரின் உடல் ஒரு தாக்குதலுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் முன்னதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் 1989 முதல் ஈரானை வழிநடத்திய நபரை குறிவைக்க அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்பு கூறினார்.

இந்தத் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என்று கூறியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை நடத்தும் வளைகுடா நாடுகள் உட்பட குறைந்தது ஏழு நாடுகள் மீது ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

கமேனியின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் கலவையான எதிர்வினைகள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில குடியிருப்பாளர்கள் தெஹ்ரான், கராஜ் மற்றும் இஸ்ஃபஹானின் சில பகுதிகளில் கூடி தெருக்களில் கொண்டாடினர்.

அதேநேரத்தில், பலர் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டது ஈரானில் மதகுரு ஆட்சியின் அடித்தளத்தை ஆழமாக அசைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இஸ்லாமிய குடியரசு அதன் முதல் போர்க்கால தலைமை மாற்றத்தை எவ்வாறு நிர்வகிக்கும் என்பது குறித்த அவசர கேள்விகளை எழுப்புகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments