செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் முதன்மை முயற்சியான பாக்ஸ் சிலிக்காவுடன் (Pax Silica) இந்தியா இன்று (20) முறையாக இணைந்தது.
பாக்ஸ் சிலிக்கா என்பது அமெரிக்க வெளியுறவுத்துறையின் செயற்கை நுண்ணறிவு மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பு தொடர்பான முதன்மை முயற்சியாகும்.
இது நம்பகமான பங்காளர்களிடையே புதிய பொருளாதார பாதுகாப்பு ஒருமித்த கருத்தை மேம்படுத்துவதாகும்.
அத்துடன், பரஸ்பர பொருளாதார பாதுகாப்பிற்கு இன்றியமையாத நம்பகமான விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவத்தை பாக்ஸ் சிலிக்கா பிரகடனம் அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், நீண்டகால செழிப்புக்கான ஒரு மாற்றும் சக்தியாக AI ஐ அங்கீகரிக்கிறது.
கனடா, நெதர்லாந்து, தாய்வான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு ஆகியவை கையொப்பமிடாத பங்கேற்பாளர்கள் ஆவார்.


