Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நார்தாம்ப்டனில் கத்திக்குத்து சம்பவம்: 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து சம்பவம்: 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பிரையர் ஹில் பகுதியில் புதன்கிழமை  நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நார்த்தாம்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நார்தாம்ப்டனைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயது சிறுவர்களும், ஆணொருவம், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் தற்சமயம் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் ஆவார், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நார்தாம்ப்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியங்கள் அல்லது சாட்சியங்கள் இருந்தால் முன்வந்து வழங்குமாறும் பிரதேச வாசிகளை வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments