Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பொங்கலை முன்னிட்டு கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இன்று திரைக்கு வருகிறது

பொங்கலை முன்னிட்டு கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இன்று திரைக்கு வருகிறது

வா வாத்தியார் திரைப்படம் நீண்ட கால தாமதங்களுக்குப் பிறகு, பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், ராஜ்கிரண், அனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர் உள்ளிட்டோர் துணை நடிகர்களாக இடம்பெற்றுள்ளனர். இப்படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ளார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாக கார்த்தி தெரிவித்திருந்தார்.

இந்த வேடம் நடிகர் எம்.ஜி.ஆரின் ரசிகர்களை பாதிக்கக் கூடுமென அவர் கவலைப்பட்டதாகவும், ஆனால் சவால்களை எதிர்கொள்வதே வளர்ச்சிக்கு வழி என முடிவு செய்து படத்தில் இணைந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, தயாரிப்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான விவகாரங்களால் இந்த திரைப்படம் பலமுறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தயாரிப்பாளர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒருகட்டத்தில் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்திருந்தது. பின்னர் அந்த தடைகள் நீக்கப்பட்டதையடுத்து, தற்போது படம் திரைக்கு வருகிறது.

பொங்கல் வெளியீடுகளின் பட்டியலில் ‘வா வாத்தியார்’ இடம்பிடித்துள்ள நிலையில், மற்ற பெரிய படங்களுடன் போட்டியை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும், நடிகர் விஜய் நடித்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதால், ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு வசூல் அடிப்படையில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பை சந்தோஷ் நாராயணன் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் செய்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments