யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சுப்பையா நளினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


