நமது நிருபர்
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வெள்ள நிவாரண பணிகளுக்காக பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியின் கீழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணற்காட்டில் இருந்து போக்கறுப்பு வரையிலான பிரதேசங்களுக்கு உட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அங்கத்தவர்களின் அடிப்படையில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





