பருத்தித்துறை மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு இன்று அதிகாலையில் வர்த்தகர்களால் மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் புகுந்தமை மரக்கறி விற்பனை வீழ்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமையினாலேயே வியாபாரிகள் மரக்கறி சந்தையை அதிரடியாக வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றியுள்ளனர்.
பருத்தித்துறை மரக்கறி சந்தையில் அதிகமான வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதியான பழைய சந்தை கட்டிட தொகுதிக்கு தாமாகவே வியாபார நடவடிக்கைகளை மாற்றியபோதும் சுமார் பத்து வரையான வர்த்தகர்கள் புதிய சந்தை தொகுதியில் வியாபாராத்திலீடுபட்டு வருகன்றனர். அங்கு மழை பொழிகின்றபோது அதிகளவான வெள்ள நீர் தேங்குவது அவதானிக்க முடிகிறது.


