Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க. த.க பாடசாலையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது .

பாடசாலை அதிபர் தவகோபால் ஜோகலிங்கம் தலைமையில் முற்பகல் 10 மணியளவில் பாண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு பாடசாலை பொதுமண்டபத்தில் குறித்த நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கட்டைக்காடு பங்குத்தந்தை மற்றும் அருட் சகோதரர் ஆகியோருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் பி.அலஸ்டன், கடைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் , அருட்சகோதரன், முள்ளியான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர் ஜோ. திவ்யா மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிருபர் மரியசீலன்-திலைக்ஸ்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments