யாழ்ப்பாணம் – தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று(02) நாட்டி வைக்கப்பட்டது.
28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அஞ்சல் மா அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர் ஆகியோர் புதிய கட்டடத்திற்கான அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.


