கொழும்பின் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் ட்ரைவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சிற்றூந்துகள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


