Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்21 வயது யுவதி மர்மமான முறையில் கொலை;

21 வயது யுவதி மர்மமான முறையில் கொலை;

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார்.

பேபி ஷானி என்ற 21 வயதுடைய யுவதி நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

யுவதியின் கொலை தொடர்பாக, அவரது காதலனான அதே பகுதியைச் சேர்ந்தவருமான ரோஷன் ருசிரன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட யுவதி 5 பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை எனவும் அவர் உயர்தரம் வரை படித்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்பு, சந்தேக நபர் யுவதியின் மூத்த சகோதரரின் நட்பு காரணமாக அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார், பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் காதலனை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளம் பெண் இறந்த இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு காலணிகளும் சந்தேக நபருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இளம் பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் அணையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபரும் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியும் அணையை நோக்கிச் செல்வதை பலர் பார்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments