Tuesday, March 10, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'ஸ்ரீ வள்ளி இல்லையென்றால் புஷ்பா இல்லை' - அல்லு அர்ஜுன்

‘ஸ்ரீ வள்ளி இல்லையென்றால் புஷ்பா இல்லை’ – அல்லு அர்ஜுன்

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 5-ந் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில், படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
அப்போது பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

இப்படத்திற்கு ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா கொடுத்த ஆதரவு மகத்தானது. ஸ்ரீவள்ளியின் ஆதரவு இல்லாமல் புஷ்பா படம் முழுமையடைய வாய்ப்பில்லை. படப்பிடிப்பு தினமும் நடக்கும். ராஷ்மிகா எப்போதாவது ஒருமுறை வருவார். அவ்வாறு அவர் வரும், அந்த நாட்கள் மிகவும் இனிமையானவையாக இருக்கும்’ என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments