Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வட்டி வீதத்தை உயர்த்திய மத்திய வங்கி!

வட்டி வீதத்தை உயர்த்திய மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வருட மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆகப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments