Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போலி வங்கி இணையதளத்தை தயாரித்து இலட்சக்கணக்கில் மோசடி!

போலி வங்கி இணையதளத்தை தயாரித்து இலட்சக்கணக்கில் மோசடி!

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று (20) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கணினி குற்ற விசாரணை பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments