பிக் பாஷ் லீக்கை (பிபிஎல்) தனியார்மயமாக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை தனியார் உரிமையாளருக்கு விற்பனை செய்ய ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. 2027-28 சீசன் முதல் புதிய உரிமையாளரின் கீழ் அணி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பிபிஎல்லின் ஏனைய அணிகளையும் தனியார் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.


