Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தொகுதி மறுசீரமைப்பு: தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பு: தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் தொகை அடைப்படையில் தொகுதி மறுசீரமைப்பை செய்யக்கூடாது என அம்மாநில முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தெலுங்கானா அரசாங்கம் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு பணி, மாநிலங்களுடன் வெளிப்படையான ஆலோசனைகள் இல்லாமல் திட்டமிடப்பட்டுள்ள விதம் குறித்து இந்த அவை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு பணியானது, அனைத்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சபை வலியுறுத்துகிறது. மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள், அதன் விளைவாக மக்கள்தொகைப் பங்கு குறைந்துள்ளதால், அவை தண்டிக்கப்படக்கூடாது, எனவே, மக்கள்தொகை தொகுதி மறுசீரமைப்பிற்கான ஒரே அளவுகோலாக இருக்கக்கூடாது.

தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட 42, 84 மற்றும் 87வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னும் அடையப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை முடக்குவதைத் தொடர்ந்து, மாநிலத்தை ஒரு அலகாகக் கொண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளின் தொகுதி மறுசீரமைப்பு செய்வது, சமீபத்திய மக்கள்தொகைக்கு ஏற்ப எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இடங்களை முறையாக அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை உடனடியாக 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும் என்று சபை தீர்மானிக்கிறது. இதற்காக தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு இந்த சபை மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments