Thursday, March 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியின் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments