ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சம வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பல்கலைக்கழகக் கல்வியைக் கற்கும் விசேட தேவையுடைய மாணவ, மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் சரஸவி திரியோ அபிமன் 2026” வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு, ஜூலை 11 அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவைகள் வகைப்பாட்டின் கீழ் அனுமதி பெற்ற 370 மாணவ, மாணவிகளுக்குத் தலா 100,000.00 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதற்கட்டத்தின் கீழ் 236 மாணவர்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.


