சில மதுபானக் கடைகளுக்கு பூட்டு – கலால் திணைக்களம் அறிவிப்பு
கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா இன்று(18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28) வரை அப்பகுதியிலுள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


