Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மீனவர்களின் உதவியுடன் சடலம் கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments