Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஆட்டம் எப்போது..? வெளியான தகவல்

ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஆட்டம் எப்போது..? வெளியான தகவல்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அடுத்த மாதம் (மார்ச்) 22-ந்தேதி தொடங்குவது உறுதியாகி உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments