Sunday, March 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து?

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து?

உலகின் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலோன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அவரது கனேடிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரும் நாடாளுமன்ற மனுவில் கால் மில்லியன் மக்கள் கையெழுத்திட்டனர்.

மஸ்க் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராக இருந்து “கனடா ஒரு உண்மையான நாடு அல்ல” என்று கூறியதை அடுத்து கனடியர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

மனுவின்படி, டிரம்ப் முன்னர் கனடா மீது 25% இறக்குமதி வரியை விதித்து, தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அந்த நாட்டை 51வது மாநிலமாக இணைக்க திட்டமிட்டிருந்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க், கனேடிய இறையாண்மைக்கு முரணாக செயல்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவர் தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் கனேடிய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மஸ்க்கின் குடியுரிமையை பறிப்பது கடினமாக இருக்கும். மோசடி அல்லது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே கனடா குடியுரிமையை ரத்து செய்ய முடியும்.

மஸ்க் சட்டப்பூர்வமாக குடியுரிமை பெற்றார், எனவே கனேடிய சட்டத்தின் கீழ் அவரது குடியுரிமையை பறிக்க முடியாது என்று சட்டப் பேராசிரியர் ஆட்ரி மேக்லீன் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments