Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023 ; கட்டுப்பணத்தை மீளளித்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2023 ; கட்டுப்பணத்தை மீளளித்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்கள் தங்களது பற்றுச்சீட்டுகளை சமர்ப்பித்தால் அந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியபோது வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளின் பிரதியைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

அத்துடன், கட்டுப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments