அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சனிக்கிழமை (16) இரவு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, எட்டு பேர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் உணவகம் மூடப்படவிருந்ததாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


