Sunday, June 21, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்அதிரடி ஆட்டத்தால் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை

அதிரடி ஆட்டத்தால் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி இன்று (21) உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வெறும் 11 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அவர் அரைச்சதம் கடந்தார்.

வானவேடிக்கை நிகழ்த்தி 29 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். 6 ஓட்டங்களால் அவர் சதத்தை தவறவிட்டார்.

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி தற்போது தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments