கொழும்பு – இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பஸ் சாரதி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதவாக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


