Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்! - பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

யாழில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்! – பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மையில் பல்பொருள் விற்பனை நிலை யங்களுக்கு மூவர் அடங்கிய கும்பல் சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல சில பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்துச் சென்றமை தொடர்பான காட்சிகள் விற்பனை நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த கும்பல் தொடர்ச்சியாக இது போன்ற திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments