Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ யக்கல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கலென்பிந்துனுவெவ பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து இழுபட்டுச் சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் பயணித்தவரும் காயமடைந்து யக்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 20,31 வயதுடைய கலென்பிந்துனுவெவ மற்றும் அங்குருவாதொட்ட பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் யக்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments