Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.

சிவில் சர்வீசஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு கடந்த 22-ம் தேதி வெளியானது. இதில் 1,009 பேர் வெற்றி பெற்று இருப்பதாக தேர்வை நடத்திய யு.பி.எஸ்.சி. அதற்கான பட்டியலுடன் வெளியிட்டு இருந்தது. அந்த பட்டியலில் மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80-வது இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்பு அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலில் 361-வது இடத்தை பெற்றாலும், பணியில் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான இந்த தேர்வில் பங்கேற்று 1,009 பேர் பட்டியலில் 80-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 80-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்ற மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உடனிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments