நாட்டைப் பாதித்துள்ள தீவிரமான வானிலை மற்றும் அனர்த்தங்களினால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 176 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிவரையான தகவல்களின்படி, நாடு முழுவதும் 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் காரணமாக அதிகளவில் கண்டி மாவட்டத்தில் 52 உயிரிழந்துள்ளதுடன் 105 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் மாத்தளை மாவட்டத்தில் எட்டு பேரும் குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 78,010 பேர், நாடு முழுவதும் உள்ள 716 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


