செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு எலும்புக்கூட்டின் மீது இருந்து நாணயக் குற்றி ஒன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 311 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




