Saturday, August 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) இரவு வேளையிலேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தங்காலை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments