ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கவனம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


