Thursday, March 19, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி

ஏஸ்’ தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் யதார்த்தமான, திறமையான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எந்த வாரிசு நடிகராகவும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியால் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த ‘மகாராஜா’ படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. தியேட்டர் வசூலில் 150 கோடியைக் கடந்தது. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு வெளிநாடுகளிலும் உள்ள சினிமா ரசிகர்கள் படத்தை ரசித்துப் பார்த்தார்கள்.

அதற்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை 2’, இந்த வருடத்தில் மே மாதம் வெளியான ‘ஏஸ்’ ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. ‘ஏஸ்’ படத்திற்கு விமர்சனங்களும் கூட பாசிட்டிவ்வாக வரவில்லை. வசூல் ரீதியாக பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. அதன் தோல்வியிலிருந்து விஜய் சேதுபதியை நேற்று முன்தினம் வெளியான ‘தலைவன் தலைவி’ காப்பாற்றியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 20 கோடிக்கும் அதிகமான வசூலை அந்தப் படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிடும் என்றே சொல்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments