Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்இளையராஜா அனாதை ஆகிவிட்டார்!

இளையராஜா அனாதை ஆகிவிட்டார்!

கங்கை அமரன் எழுதி இருக்கும் ’உயிரினையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்ப் படம் 3 படத்தில் இரு பாடல்கள் எழுதியிருக்கிறேன். பாடல் நன்றாக வந்துள்ளது. AI நம்மை கெடுத்துக் கொண்டுள்ளது.

அதனை நம்பி நாம் வேலை செய்தால் பிற்காலத்தில் நம்முடைய மூளை வேலை செய்யாது. வருங்கால குழந்தைகள் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிக்கையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள்.

பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இளையராஜா பற்றி தவறாக எழுதினார். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டிலாகிவிட்டார் என்றும் கார்த்தி ராஜா இளையராஜா கூட இருக்கிறார். இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்றும் ஏன் எழுத வேண்டும்.

இளையராஜாவை அதற்கு இறக்குகிறீர்கள், 50 ஆண்டுகள் நிலையாக நின்றுள்ளார். இளையராஜா யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பயில்வானிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார், அவரை அவராக இருக்க விடுங்கள் என்று கங்கை அமரன் பேசியிருக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments