Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந் தேதி (புதன்கிழமை) தமிழகம் வருகைதர இருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments