Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெசாக் பூரணை - நாட்டில் விசேட பாதுகாப்பு நடைமுறைக்கு!

வெசாக் பூரணை – நாட்டில் விசேட பாதுகாப்பு நடைமுறைக்கு!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும், அதேபோன்று போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தற்போது தயார் செய்துள்ளனர்.

இந்த முறையும் நாம் முக்கியமாகப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம், ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும், குறிப்பாகத் தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் உங்களின் பாதுகாப்பிற்காக இருப்பார்கள்.

அதேபோன்று, அலட்சியமாகவும் அபாயகரமாகவும் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இயக்கப்படும் ஏதேனும் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி தொடர்பாக 070-4755600 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கோ அல்லது 119, 188 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments