Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், இதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டபோது, அது பதிவு செய்யப்படாத வாகனம் எனத் தெரியவந்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு, அதன் உரிமையாளரிடம் 10,000 ருபாய் பணத்தை லஞ்சமாக கோரியுள்ளார்.

வாகன உரிமையாளர் அவ்வளவு பெரிய தொகையை வழங்க மறுத்ததை அடுத்து, குறித்த அதிகாரி அதற்குப் பதிலாக ஒரு குப்பி சாராயத்தை (கால் சாராயம்) லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார்.

அத்துடன், அந்த மதுபான போத்தலைத் தரும் வரை உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையை அந்த அதிகாரி தனது பாதுகாப்பில் சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ‘அம்மா கடை’ என்ற மளிகைக் கடைக்கு முன்னால், சிவில் உடையில் இருந்த அந்த அதிகாரி குறித்த நபரிடமிருந்து மதுபான போத்தலைப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் அந்த அதிகாரியை கையும் மெய்யுமாக கைது செய்தனர்.

குறித்த உத்தியோகத்தர் நேற்று காலை 07.40 மணிக்கு பணிக்கு சமூகமளித்துள்ளதுடன், எவ்வித விடுப்பு அனுமதியும் பெறாமல் சிவில் உடையில் இந்த ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments