Wednesday, August 26, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

 

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்து – லங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த விஜயத்தின் போது மறுஆய்வு செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments