வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு,சுண்டிக்குளம் கடற்பரப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியன் இழுவைமடி படகுகளை தேடி கடற்படையின் டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன
அண்மைய நாட்களாக வடமராட்சி கிழக்கில் அத்துமீறி நுழைந்து கரைக்கு அண்மையாக வருகை தந்து இந்தியன் இழுவைமடி படகுகள் அட்டகாசம் செய்தனர்
இதற்கு வடக்கு மீனவர்கள்,அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு கடற்படை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்த நிலையில் இன்று கடற்படையின் டோரா படகுகள் இந்தியன் இழுவைமடி படகுகளை தேடி வடமராட்சி கிழக்கு கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்


