Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

இங்கிலாந்தில் இறந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை எனும் சாதனையை ஹ்யூகோ(Hugo) எனும் 10 வார ஆண் குழந்தை படைத்துள்ளது.

பிறவியிலேயே கருப்பை இல்லாத குறைபாட்டைக் கொண்ட ஒரு பெண், மறைந்த ஒரு கொடையாளரின் உறுப்பைப் பெற்று மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2025 கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக, மேற்கு லண்டனில் உள்ள (Queen Charlotte) குயீன் சார்லோட் மற்றும் (Chelsea) செலிசி மருத்துவமனையில் (HUGO 0 ஹ்யூகோ பிறந்துள்ளார்.

பிறக்கும்போது சுமார் (3.1 kg) எடையுடன் இருந்ததாகவும் தற்போதுவரை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல தசாப்த கால மருத்துவ ஆராய்ச்சியின் விளைவாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை, கருவுறாமை சிக்கல்களைக் கொண்ட பல பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த IVF சிகிச்சை மற்றும் பிரசவம் சாத்தியமானது.

ஏற்கனவே உயிருள்ள உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் ஒரு குழந்தை பிறந்த நிலையில், தற்போது உறுப்பு தானம் மூலம் ஹ்யூகோ(Hugo) பிறந்தது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இச்சாதனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிடைப்பதற்கான எதிர்கால வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

இதேவேளை, நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்களுக்கும் குறித்த பெண் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments