Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படு காயம் - யாழில் சம்பவம்!

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படு காயம் – யாழில் சம்பவம்!

சாவகச்சேரி நுனாவில் வைரவர் கோயில் சந்தியில் இன்று மாலை 5 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி பாரியளவு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆண் நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்த நபர்கள் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments