யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பதுளை மாவட்டம் அப்புத்தளை பிரதேச செயலக பிரிவில் உள்ள பண்டார எளிய பிரவு, தம்பேத்தன்ன தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
425,000 ரூபா பெறுமதியான பெயிண்ட் (paint) வகைகள் ஆலய நிர்வாகத்திடம் இன்று சந்நிதியான் ஆச்சுரமத்தால் வழங்கிவைக்கபட்டுள்ளது.
இவ் உதவியினை
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் அனுராதபுரம் கெக்கிராவ ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கட்டடப் பணிக்காக 100,000 ரூபா நிதி ஆலய நிர்வாகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டது.




