Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைத்து நிறுவனங்களும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு கட்டமைப்பாகச் செயற்பட்டு, சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்காகத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்குப் பின்னர், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய வீடுகளை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்குமாறும், இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

இந்த கலந்துiராயடலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொத்தா, உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments