Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஒடிசா மருத்துவமனை தீ விபத்து!

ஒடிசா மருத்துவமனை தீ விபத்து!

ஒடிசா அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது பத்து நோயாளிகள் உயிரிழந்ததாக மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர், நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது சுமார் 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும் கூறினார்.

தீ விபத்தில் உயிரிழந்த நோயாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியத்திலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும்,கயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.

அதேநேரம், உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ரூ.25 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த தீ விபத்தானது குறுக்கு மின் இணைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments