Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்த பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர்.

பேருந்து திடீரென சாரதி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டர்.

இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்ததுடன் அவர்களில் ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

பேருந்து பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments