Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள், லெபனானை பிராந்திய இராணுவ மோதல்களில் இருந்து விலக்கி வைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைச் சீர்குலைப்பதாக ஜனாதிபதி அவ்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களையும் அவர் ‘ஆக்கிரமிப்பு’ எனச் சாடியுள்ளார்.

இதேவேளை பிரதமர் நவாப் சலாம் இச்செயலை ‘பொறுப்பற்றது’ என விமர்சித்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments